search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டல் மண்"

    • பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையத்தில் அரசின் சார்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது.
    • திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலமாக நீர் நிரப்ப தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு செயலாளர் அப்புசாமி அளித்த மனுவில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலமாக நீர் நிரப்ப தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளில் சீமை கரு–வேல மரங்கள், முட்புதர்களை அகற்றி, வண்டல் மண் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு மண் அள்ளி தூர்வாரும்போது குளம் ஆழப்படுத்தப்படும்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருவதால் வண்டல் மண் எடுத்து ஆழப்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இடைத்தரகர்கள் மண் அள்ளாமல் இருக்க அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையத்தில் அரசின் சார்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் பழுதடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    • மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
    • விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

    ஆலங்குளம்:

    விவசாய மேம்பாட்டுக்காக குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்து ள்ளது. இதற்கு மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வரவேண்டும் என்ற விதி உள்ளது.

    அதேபோல் விவசாயம், மண்பாண்டம் தயாரித்தல் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு விவசா யிகள் இலவசமாக மண் எடுத்து செல்லலாம் எனவும் அரசு விதி வகுத்து ள்ளது.

    மேலும் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவல ர்களால் மண் வெட்டி எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து மட்டுமே மண் வெட்ட வேண்டும். விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் இருந்து கடந்த ஒரு வார காலமாக வண்டல் மண் வெட்டி எடுத்துச் செல்லப்ப டும் நிலையில், அந்த வாகன ங்கள் எவ்வித விதிகளையும் பின்பற்றுவ தில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.

    தனி நபர் ஒருவர் உரிய அனுமதி பெற்றுள்ள நிலையில் சுமார் 15 ஜே.சி.பி. வாகனங்கள், சுமார் 100 டிராக்டர்களை கொண்டு அதிக அளவு வண்டல் மண் எடுக்கப்படுகிறது எனவும், அந்த வாகனங்கள் சாலை களில் அதிவேகத்தில் செல்லும்போது வண்டல் மண் கட்டிகள் சாலையில் விழுவதால் விபத்து அபாயம் இருப்பதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவிக்கி ன்றனர்.

    விவசாயத்திற்கு, மண்பா ண்டம் செய்ய, வீட்டு சொந்த உபயோ கத்திற்கு மட்டுமே பயன்படு த்தப்பட வேண்டிய மண், வர்த்தக ரீதியாக டிராக்டர் லோடு ஒன்று ரூ. 700 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை செய்யும் அரசியல் பிரமுகர்களுக்கு சில அதிகாரிகளும் உடந்தை யாக இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு மண் எடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலக்தில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் தற்போது பொது ப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி த்துறை வசம் அனுமதி பெற்றாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே அதிக முறைகேடு உருவாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே கலெக்டர் நேரடி விசாரணை நடத்தி, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து தகுதியான விவசாயிகள் மட்டுமே குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

    • நஞ்சை நிலங்களை மேம்படுத்த ஏக்கர் நிலத்திற்கு 75 கனமீட்டர் அளவு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மண்பாண்ட தொழிலுக்காக 60 கனமீட்டர் அளவு கட்டணமில்லாமல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண்,களிமண் வெட்டி எடுப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட விவசாய பயன்பாட்டிற்காக நஞ்சை நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கனமீட்டர் அளவும் மற்றும் புஞ்சை நிலங்களை மேம்படுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 90 கனமீட்டர் அளவும். மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கனமீட்டர் அளவும் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு 30 கனமீட்டர் அளவும் கட்டணமில்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இச்சலு கையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாயம் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா அடங்கல், கிரைய பத்திரம் மற்றும் புலப்படநகல் ஆகியவற்றுடனும், மேலும் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்று களுடனும், சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண்னை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • 29 விவசாயிகள் 24 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துள்ளனர்.

    உடுமலை :

    விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும் நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்த மே மாதம் 5-ந் தேதி மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    எடுக்கப்படும் வண்டல் மண்விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு மற்றும் புஞ்சை நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு மண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. உடுமலை தாலுகாவில் 9 குளம், குட்டைகளில், விவசாயிகள் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் திருமூர்த்தி அணையிலும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில் நடப்பாண்டு திருமூர்த்தி அணையில் 34 ஆயிரத்து 100 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று நிலத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு 18 முதல் திருமூர்த்தி அணையிலிருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வந்தது.

    தற்போது வரை 29 விவசாயிகள் 24 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துள்ளனர். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி நடந்து வருவதால் மண் எடுக்கும் அனுமதி நிறைவு செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், அணையின் நீர் தேங்கும் பரப்பில் மேடான பகுதியிலிருந்து 24 ஆயிரம் கனமீட்டர் மண் விவசாயிகள் எடுத்து விளை நிலங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும் மண் எடுக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது என்றனர்.

    • மே மாதம் 5-ந் தேதி, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர் நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்த மே மாதம் 5-ந் தேதி, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    குளம், குட்டைகள் மற்றும் அணையில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.நஞ்சை நிலமாக இருந்தால், இரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு வழங்கப்படும்.புஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு வழங்கப்படும். வி திமுறை அடிப்படையில், வருவாய்த்துறை, வேளாண் துறை, கனிம வளத்துறை வாயிலாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது.

    உடுமலை தாலுகாவில் விருகல்பட்டி, பழையூர், வாகத்தொழுவு, ஜக்கமநாயக்கன்பாளையம், பொன்னேரி, இலுப்பநகரம், ஆலாமரத்தூர், வடுகபாளையம், சுங்காரமுடக்கு, அந்தியூர், கணபதிபாளையம், கரையான் குட்டை, கருப்பராயன் கோவில் குளம், சின்ன வாளவாடி, பெரிய குளம் என 9 குளம், குட்டைகளில் 30 ஆயிரத்து 742 கன மீட்டர் மண் விவசாயிகள் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் அடிப்படையில் விவசாயிகள் மண் எடுத்து வருகின்றனர்.

    பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் ஒன்றான, திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவு மண் மேடாக உள்ளது. இந்த மண் அகற்றி ஆழப்படுத்த வேண்டும்.இதனால் கூடுதலாக ஒன்றரை டி.எம்.சி., நீர் தேக்க முடிவதோடு, பி.ஏ.பி., திட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.கடந்த 2017ம் ஆண்டு, சர்வே எண் 252, 253ல், 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது.

    அப்போது 36 ஆயிரம் கன அடி மண் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் மழை துவங்கியது பாசனம் ஆகிய காரணங்களினால் நிறுத்தப்பட்டது.அந்த ஆண்டே, சர்வே எண் 254ல் 34 ஆயிரம் கன மீட்டர் எடுக்க அனுமதியளித்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.ஆனால் நடப்பாண்டு குளம், குட்டைகளில் மண் எடுக்க அனுமதி அளிக்கும் அரசு ஆணையில் திருமூர்த்தி அணை விடுபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள்திருமூர்த்தி அணையிலும் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன் அடிப்படையில் நடப்பாண்டு திருமூர்த்தி அணையில் 34 ஆயிரத்து 100 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.இதனையடுத்து திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரிய விவசாயிகள் விண்ணப்பத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. முதல் கட்டமாக 10 விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கன மீட்டர் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டு, மண் எடுக்கும் பணி துவங்கியுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    திருமூர்த்தி அணையிலுள்ள வண்டல் மண், விவசாய நிலங்களுக்கு அதிக பயன் அளிக்கும் என்பதால், விவசாயிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். ஏறத்தாழ, 40 விவசாயிகள் வரை விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதிக கன மீட்டருக்கு அனுமதி உள்ளதால் விருப்பம் உள்ள விவசாயிகள், வி.ஏ.ஓ.,சான்று வேளாண்துறை பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம்.இதன் வாயிலாக அணை நீர் தேக்கும் பரப்பளவு ஆழம் அதிகரித்து கூடுதல் நீர் சேமிக்கப்படுவதோடு விவசாய நிலங்களும் வளமாகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏரிகள், குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.
    • வண்டல் மண் எடுக்க லாரிகளை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் அரங்க சங்கரய்யா, செயலாளர் கோவிந்தன், மாவட்ட தலைவர் சரவணன், வெற்றிமணி மற்றும் நிர்வாகிகள் சேலம் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஏரிகள், குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் வண்டல் மண் எடுக்க டிராக்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற நிபந்தனை சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டிராக்டர் இருப்பவர்களி–டம் டிராக்டர் வைத்திருப்பவர்களிடம் மண் கொண்டு செல்லும் ட்ரெய்லர் பெட்டி இல்லை. வாடகை கட்டுபடியாகவில்லை என்ற காரணம் கூறி வாடகைக்கு வர மறுக்கிறார்கள். தற்போது மழை பெய்துள்ளதால் வண்டல் மண் எடுக்க வாடகை டிராக்டர் கிடைப்பதில்லை.

    குறிப்பிட்ட காலத்துக்குள் மண் எடுத்து பயன்படுத்த வேண்டும் என்பதால் தற்போது உள்ள டிராக்டர் வாகனங்கள் போதுமானதாக இல்லை. அதனால் மண் எடுக்கும் பணிகள் தாமதம் ஆகிறது.

    ஒரு டிராக்டர் வாடகை ஒரு லோடுக்கு ஒரு யூனிட் மட்டுமே சேர்த்து ரூ.1500. 4 டிராக்டர் லோடு கொள்ளும் லாரிக்கு வாடகை 4 யூனிட்டுக்கும் சேர்த்து ரூ.4500 மட்டுமே. லாரியை பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு ரூ.1500 முதல் ரூ.2000 வரை மிச்சமாகிறது.

    மேலும் டிராக்டர் மூலமாக நெடுஞ்சாலைகளில் மண் கொண்டு செல்லும்போது சாலைகளில் கொட்டுகிறது. இதனால் நடைபாதை சாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே வண்டல் மண் எடுக்க லாரிகளை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குளம், குட்டைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
    • நடைமுறை சிக்கல்களை தீர்த்து வைத்து வழிமுறையை எளிதாக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ளசில குளம், குட்டைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் வேளாண் துறை அனுமதி பெறுவது, பொக்லைன் மற்றும் லாரி வாடகை தொகையை முன்கூட்டியே செலுத்துவது எனபல்வேறு கெடுபிடிகள் செய்யப்படுகிறது. மண் எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தும் விவசாயிகள் மண் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    இந்நிலையில் நடைமுறை சிக்கல்களை தீர்த்து வைத்து வழிமுறையை எளிதாக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கலெக்டர் அலுவலகத்தில்நடந்த குறைகேட்பு கூட்டத்தில் உடுமலை வட்டார விவசாயிகள், கோரிக்கை விடுத்து பருவமழை துவங்கும் முன்னதாக நிபந்தனையற்ற அனுமதி வேண்டுமென மனு கொடுத்தனர்.

    • நீர் நிலைகளில் வண்டல் மண் கிராவல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
    • மனுதாரர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருடன் ஒரு ஒப்பந்தப்பத்திரம் நிறை வேற்றிக்கொள்ள வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள வண்டல் மண், கிராவல் மண்ணை விவசாயம், பொது மண்பாண்ட தொழில் பணிக ளுக்காக பொதுமக்கள் எடுத்துச் செல்ல இலவசமாக அனுமதி வழங்குவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

    இதன்படி பயனாளிகள் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் தூர்வாரி எடுத்து செல்லப்பட வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.

    விவசாய பணிக்காக வண் டல் களிமண் கிராவல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவ சாய நிலம் வைத்துள்ளார் அல்லது கிராம அடங்கல் பதிவேட்டின்படி குத்தகை பெற்று விவசாயம் செய்து வருகிறார் என்பதற்கும், அவருடைய நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை, புஞ்சை) குறித்தும் விவசாய நிலத்தின் விஸ்தீரணம் குறித்தும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலு வலரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    மண்பாண்டம் தொழில் செய்பவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் சட்டம் 1983-ன் கீழ் தமிழ்நாடு மண்பாண்டம் தொழிலாளர் கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினராக இருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 75 க.மீட்டரும், எக்டேர் ஒன்றுக்கு 185 க.மீட்டருக்கு மிகாமலும் புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டரும் எக்டேர் ஒன்றுக்கு 22 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் களிமண், கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க கப்படும்.

    வண்டல் மண், கிராவல் மண் நீர்வளத்துறை பொறியா ர் ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் மூலம் வாகனத்தில் ஏற்றி விடப்படும். தூர்வாருதல் மற்றும் வாகனத்தில் வண்டல் மண், கிராவல் மண்ணை ஏற்றுவதற்கான கட்டணமாக முதன்மை தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளவாறு அல்லது மாற்றம் ஏதும் செய்யப்பட்ட தொகையை செயற்பொறியாளரின் பெயரில் காசோ லையாக மனுதாரரால் அர சுக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும் .

    வண்டல் மண், கிராவல் மண் எடுத்துச்செல்ல கலெக்டரின் உத்தரவு ஆணை பெற்றவுடன் அதன் படி மனுதாரர் சம்பந்தப் பட்ட வட்டாட்சியருடன் ஒரு ஒப்பந்தப்பத்திரம் நிறை வேற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே கண்மாயிலிருந்து வண்டல்மண் கிராவல் 2 மண் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×